சின்னாளபட்டி: சின்னாளபட்டி மேட்டுப்பட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில் முன்பு பாக்கியம்மாள் என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்தார். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனே பாக்கியம்மாளை மீட்டு முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் முதியோர் உதவித்தொகை வராததால் பாக்கியம்மாளை காப்பகத்தி–்ல் இருந்து வெளியே அனுப்பி விட்டனர். இதனால் பாக்கியம்மாள் மீண்டும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் முன்பு பிச்சை எடுத்து தங்கி வந்தார். இதுகுறித்து நேற்றை தினகரனில் மீண்டும் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்றே அதிகாரிகள் வந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை பாக்கியம்மாளிடம் வழங்கினர். தொடர்ந்து அவரை முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர்.