சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த இந்து (45,பெயர் மாற்றப்பட்டுள்ளது) அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்(24) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்துள்ளார். அதை நம்பிய எனது மகள் தினேஷ் உடன் சென்றுள்ளார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தினேஷ் எனது மகளை லாட்ஜிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.