புதுடெல்லி: விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு துறை தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேஜஸ் விமானத்தில் தற்போது பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.