திருவனந்தபுரம் :சபரிமலையில் 2037ம் ஆண்டு வரை படிபூஜைக்கான முன்பதிவு முடிந்தது. படிபூஜைக்கான தற்போதைய கட்டணம் ₹75 ஆயிரம் ஆகும். இது சன்னிதானத்தில் மிகவும் விலையுயர்ந்த வழிபாடுகளில் ஒன்றாகும். சபரிமலையில் நேற்று தந்திரி கண்டரர் ராஜீவரரு முன்னிலையில் படிபூஜை நடந்தது. இதுபோல மகரவிளக்கிற்கு பிறகு, 15 முதல் 19ம் தேதி வரை படிபூஜை நடக்கும்.