ஹுப்பள்ளி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி தெரிவித்தார். இது குறித்து ஹுப்பள்ளியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தத் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் வரும் 30ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.