பெங்களூரு: கொரோனா தடுப்பு ஊசி குறித்து தவறான கருத்துக்கள் தெரிவித்து வருவது தேவையற்றது என்று பா.ஜ. தேசிய பொதுசெயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார். உடுப்பியில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. ஆனால் சிலர் தடுப்பூசி குறித்து தவறான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்து தவறாக பேசுவது தேவையற்றது. சில கட்சிகள் நாங்களும் செய்ய மாட்டோம் செய்பவர்களையும் விட மாட்டோம் என்ற மனபான்மை கொண்டுள்ளனர். இதை மாற்றிக்கொள்ள வேண்டும். இது போன்ற கட்சிகளை மக்கள் நாட்டின் அரசியலில் இருந்தே அழித்து விடுவார்கள்.