பரெய்லி: உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்தாண்டு ஜூனில் இயற்கை உபாதையை கழிக்க கரும்பு தோட்டத்துக்கு சென்ற போது, 30 வயது நபரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை வெளியில் சொன்னால், அப்பெண்ணையும் அவருடைய குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால், நடந்த சம்பவத்தை சிறுமி மறைத்து விட்டாள். கடந்த டிசம்பரில் தனது மகள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை தந்தை கண்டுபிடித்தார். பெண்ணிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இது பற்றி போலீசில் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து, பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.