லாகூர்: பாகிஸ்தானில் செயல்படும், ‘ஜெய்ஷ் இ முகமது’ என்ற தீவிரவாத அமைப்பு மிக பயங்கரமானது. ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தி 40 பேரை கொன்றது இந்த அமைப்பு தீவிரவாதிகள்தான். இந்நிலையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் குற்றச்சாட்டில் இதன் தலைவன் மசூத் அசார் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.