சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் மாதவன் மரணம்

திருவனந்தபுரம்: பிரபல தமிழ் எழுத்தாளர் மாதவன். இவர் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். திருவனந்தபுரத்தில் பாத்திரக்கடை வைத்திருந்த இவர், ஏராளமான தமிழ் சிறுகதை, நாவல்களை எழுதியுள்ளார். 2009ல் இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடு’ என்ற இவரது சிறுகதை தொகுப்புக்கு 2015ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.கிருஷ்ணபருந்து, புனலும் மணலும், யானை சந்தம், மாதவன் கதைகள் உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். கடந்த வாரம் மூச்சு திணறல் ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று  மரணமடைந்தார்.

Related Stories: