ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை பணியாளர் லஞ்சம் பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் விபத்தில் உயிரிழப்பவர்கள் முதல் கொலை, தற்கொலை மற்றும் சந்தேக மரணம் வரை உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்படும். அங்கு பிணவறையில் பணி செய்யும் மருத்துவமனை ஊழியர் டில்லிபாபு உடற்கூறாய்வு செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பணம் பெரும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.