இந்தூரில் பரபரப்பு கடவுளை இழிவுபடுத்திய காமெடி நடிகர் கைது

போபால்: காமெடி என்ற பெயரில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக மேடை நகைச்சுவை நடிகர் முனாவர் பரூக் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கபே ஒன்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், மும்பையைச் சேர்ந்த பிரபல மேடை நகைச்சுவை நடிகர் முனாவர் பரூக்கின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், முனாவர் பரூக் காமெடி என்ற பெயரில் இந்து கடவுகள்ளையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் பாஜ எம்எல்ஏ மாலினி லட்சுமணன் என்பவரின் மகன் ஏகலைவா சிங் கவுர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.முனாவர் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்களையும், அமித்ஷாவையும் இழிவுபடுத்துவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறீயதாகவும் பரூக் மற்றும் அவரது குழுவினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: