புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் இன்று காலை டெல்லியில் இறந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் (86) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலை உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங், தனது சுயநினைவை இழந்ததால் கடந்த அக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.