சென்னை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் வேண்டுகோள் May 11, 2021 பிரதம செயலாளர் பள்ளி கல்வித் துறை சென்னை தயோயன்பு பள்ளி கல்வித் துறை தின மலர் சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை 2006ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். எனவே இந்த செயலை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். … The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் வேண்டுகோள் appeared first on Dinakaran.
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு
தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: மோடி, அமித் ஷாவுக்கு சரத் பவார் கண்டனம்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை