அகமதாபாத்: பல நாடுகளில் திடீரென தோன்றிய மர்ம உலோக தூண் போன்று, அகமதாபாத் பூங்காவிலும் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் திடீரென உலோகத்தால் ஆன 6 அடி உயர ஒற்றைத் தூண் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. பூங்காவில் பணிபுரியும் உள்ளூர் தோட்டக்காரரான ஆசாராம் கூறுகையில், ‘நான் மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்குத் திரும்பியபோது, இந்த திடீர் உலோக தூண் அமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்’ என்றார்.