மோடியை துஷ்பிரயோகம் செய்த அமைச்சர் தம்பி மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தனியார் மொபைல் நிறுவனத்தை பிரபலமாக்க பிரதமர், முதல்வர் படங்களை பயன்படுத்தியதாக, அமைச்சரின் தம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தர பிரதேச தொழில்பயிற்சி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் கபில்தேவ் அகர்வால். இவரது சகோதரர் லலித் அகர்வால் விளம்பர நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.  இவர், இம்மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட மொபைல் நிறுவன விளம்பரம் ஒன்றில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் இடம் பெறும் வகையில் விளம்பரம் ஒன்றை தயாரித்தார். இது தொடர்பாக கேள்விகள் எழவே, அதில் இருந்த பிரதமர், முதல்வர் படங்கள் கடந்த 26ம் தேதி நீக்கப்பட்டு, மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு, ``மொபைல் போன் நிறுவன தொடக்க விழாவில், திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது, என்று கூறி அமைச்சர் மறைமுகமாக மொபைல் நிறுவனத்தை ஊக்குவித்துள்ளார். இது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று வலியுறுத்தினார்.

Related Stories: