லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்துக்கு கீழே சரயு ஆற்றின் நீரோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கோயிலை கட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். தற்போது, கோயில் மாதிரி உருவாக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ராமர் கோயிலை கட்டுவதற்காக தீர்மானிக்கப்பட்ட இடத்துக்கு அடியில், அருகில் உள்ள சரயு நதியின் நீரோட்டம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கோயிலை கட்டுவதற்கு பாதுகாப்பாக இருக்காது.