தண்டையார்பேட்டை: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்ரதா ஜனா(46). சவுகார்பேட்டையில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் பத்து பேர் பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர். இவரிடம் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நகை வியாபாரிகள் நகை செய்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான அய்யனார்(50). சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைகளில், தங்க நகைகளை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். இங்கு பெரும்பாலான நகை பட்டறைகளில் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு அய்யனார் சுப்ரதா ஜனா பட்டறையில் இருந்து இரண்டரை கிலோ தங்க நகைகளை வாங்கி சென்றுள்ளார்.