கோலார்: கோலார் மாவட்டத்தில் செவி திறன் குறைப்பாடு உள்ளவர்கள் சுயதொழில் தொடங்க இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாநில மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர் நலத்துறை மாவட்ட இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாவட்டத்தில் செவி திறன் குறைபாடு உள்ளவர்கள் சுயதொழில் செய்ய வசதியாக இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உதவியை பெற விரும்புவோர் வரும் ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.