வால்பாறை: வால்பாறையில் சத்துணவு கூடத்தை உடைத்து காட்டு யானைகள் சூறையாடின. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ள அப்பர்பாரளை எஸ்டேட்டில் இன்று அதிகாலை வனத்திலிருந்து வெளியேறி புகுந்த 7 காட்டு யானைகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து, உள்ளே புகுந்தன. அங்கு மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு உள்ளது. யானைகள் அட்டகாசத்தால் அங்கிருந்த சமையல் பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் பள்ளி வளாகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி, 3 கார்களையும் சேதப்படுத்தி உள்ளது.