மயிலாடுதுறை: நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் காயலான் கடையில் மூட்டை, மூட்டையாக இருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் வாடகை கட்டிடத்தில் காயலான் கடை நடத்தி வருபவர் பெருமாள்சாமி (55). இவரை காலி செய்வதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (29ம் தேதியுடன்) கால அவகாசம் முடிகிறது. இது குறித்து மயிலாடுதுறை ஆர்டிஓ மற்றும் அதிகாரிகள் அந்த காயலான் கடைக்கு சென்று கடையை காலி செய்யும் உத்தரவை வாசலில் நேற்று ஒட்டினர்.