தங்கவயல்: தங்கவயல் தங்க சுரங்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து காற்று வெடிப்பு (ஏர் பிளாஸ்ட்) ஏற்பட்டு நில நடுக்கம் போன்ற சத்தம் கேட்டதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். தங்கவயல் தங்க சுரங்கங்களில் தங்க உற்பத்தி பணி நடந்த போது ஆழ் சுரங்கங்களில் உள்ள பாறைகள் சூடேறி அதன் இடுக்குகளில் காற்று புகும் போது (ராக் பர்ஸ்ட்) பாறை வெடித்து நில நடுக்கம் போன்ற பெறும் சத்தம் கேட்கும், அதே போல் சுரங்கங்களில் ஊற்று நீர் நிரம்பி காற்றழுத்தம் ஏற்பட்டு (ஏர் பிளாஸ்ட்) பெரும் ஓசை கேட்கும். இது போன்ற வெடிப்புகள் தங்க சுரங்கத்தில் ஏற்பட்டு வெடித்த பாறை குவியல்களின் கீழ் சிக்கி பல தொழிலாளர்கள் பலியாகினர். இந்த வெடிப்பு ஓசை தங்கவயல் மக்களுக்கு பழகிய ஒன்று. தங்க சுரங்கம் மூடப்பட்டு உற்பத்தி பணி நின்று போன பிறகும் ராக் பர்ஸ்ட் மற்றும் ஏர் பிளாஸ்ட் ஓசைகள் கேட்டு கொண்டிருந்தது.