இதுதான் தேனிலவு!

கர்நாடகாவைச் சார்ந்த இளம் தம்பதியர் அனுதீப் - மினுஷா. சமீபத்தில்தான் அவர்களுக்கு திருமணமே நடந்திருக்கிறது. தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்கு முன்பாக சோமேஸ்வரர் கடற்கரைக்குச் சென்றிருக்கிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகளால் நாசமாகிவிட்ட அந்த கடற்கரையைப் பார்த்து கடுப்பாகி விட்டனர். இதை யாரும் சுத்தம் செய்ய மாட்டார்கள், நாம்தான் செய்ய வேண்டும் என்று தேனிலவையும் மறந்து துப்புரவுப் பணியில் ஈடுபடத் தொடங்கினர். இதுவரைக்கும் சுமார் 1000 கிலோ குப்பைகளை சிறுக சிறுக இவர்களே அகற்றியிருக்கிறார்கள். தேனிலவையும் மறந்து சமூகசேவையில் ஈடுபட்டிருக்கும் இத்தம்பதியினருக்கு இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன.

Related Stories: