நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலி பேசாததால் சோகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சாலையில் படுத்து உறங்கிய முதியவரை எரித்து கொன்ற இளைஞன் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் 62 வயதான கூலி தொழிலாளி சந்திரன். இவர் சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 5 இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி பின்னர் அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.