சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு உதவ ராகுல் டிராவிடை அனுப்ப இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கிரிக்கெட் வாரியத்த்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி வீரர்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ டிராவிடை ஆஸ்திரேலியாவுக்கு வெகு விரைவில் அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலிய சுழலில் நகர்ந்து வரும் பந்தை எப்படி விளையாடுவது என்பது குறித்த புரிதலை பேட்ஸ்மேன்களுக்கு கொடுத்து, சிறப்பாக வழிநடத்த அவரால் மட்டுமே முடியும். அதோடு அவரது வருகை வலைபயிற்சியின்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.