பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய தா.பாண்டியன் உள்பட 8 பேருக்கு விருது

சென்னை: பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றியதற்காக தா.பாண்டியன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக 4ம் ஆண்டாக சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை  முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்றார். தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி சிறப்புரையாற்றினர். விழாவில் காயிதே மில்லத் விருது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், டாக்டர் அம்பேத்கர் விருது மறைந்த டி.எம்.உமர் பாரூக், தந்தை பெரியார் விருது தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு,  கவிக்கோ விருது பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்,

பழனிபாபா விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில செயலாளர் காயல் மஹபூப், காமராஜர் விருது- முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சாதிக்,  நம்மாழ்வார் விருது இயற்கை  விவசாயி சரோஜா குமார், அன்னை தெரசா விருது லயோலா கல்லூரி பேராசிரியர் தீபக் நாதனுக்கும் வழங்கப்பட்டன.  விழாவில் பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்ஸா அஹமது நவவி, ரத்தினம், வழக்கறிஞர் சபியா நிஜாமுதீன், மாநில  செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ஷபீக் அஹமது உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: