பெ.நா.பாளையம்: கோவை அருகே இன்று அதிகாலை காவல்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாங்கரை அடுத்துள்ள ஆனைகட்டியில் காவல் துறை சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சோதனை சாவடிக்கு வந்தது.. அப்போது காவலர்கள் பணியில் இருந்தனர். அங்கு வந்த யானை சோதனை சாவடியை முற்றுகையிட்டது. பின்னர் சோதனை சாவடியை சுற்றி வந்தது. அப்போது அங்கிருந்த நாய் யானையை நோக்கி சத்தமிட்டு குரைத்தவாறு ஓடி வந்தது.