காவல்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானை: கோவை அருகே அதிகாலை பரபரப்பு

பெ.நா.பாளையம்: கோவை அருகே இன்று அதிகாலை காவல்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாங்கரை அடுத்துள்ள ஆனைகட்டியில் காவல் துறை சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சோதனை சாவடிக்கு வந்தது.. அப்போது காவலர்கள் பணியில் இருந்தனர். அங்கு வந்த யானை சோதனை சாவடியை முற்றுகையிட்டது. பின்னர் சோதனை சாவடியை சுற்றி வந்தது. அப்போது அங்கிருந்த நாய் யானையை நோக்கி சத்தமிட்டு குரைத்தவாறு ஓடி வந்தது.

இதனால் கோபமடைந்த யானை நாயை சிறிது தூரம் விரட்டி சென்றது. இதை தொடர்ந்து சோதனை சாவடி முன்பு சிறிது நேரம் நின்று விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த வாழைமரங்களை சேதப்படுத்திவிட்டு அந்த யானை வனத்துக்குள் சென்று விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: