புதுடெல்லி: டெல்லி விலங்கியல் பூங்காவில் பிரசவத்தால் அவதியுற்ற ஒரு வெள்ளை புலி மற்றும் அது ஈன்ற ஒரு குட்டி பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி விலங்கியல் பூங்காவில் நிர்பயா என்கிற அந்த வெள்ளைப்புலி பூங்காவில் ரொம்பவே பிரபலம். இந்த நிர்பயா நேற்று பூங்காவில் இரண்டு குட்டிகளை ஈன்றது. அதன்பின் அடுத்தகுட்டிகளை பிரசவிக்க முயற்சித்தபோது ஏற்பட்ட சிக்கலால் துடித்தது. எனினும், தொடர்ந்து குட்டிகளை பிரசவிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்ததாக டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் ரமேஷ் பாண்டே கூறினார். இதுபற்றி பாண்டே கூறியதாவது: பிரசவ சிக்கலால் வெள்ளைப்புலி துடித்தது. 24மணிநேரத்திற்கு பின் பிர்சனை அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குழு மற்ற விலங்கியல் பூங்காக்கள் மற்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பரேலியின் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வெள்ளைப்புலியை காப்பாற்ற முயன்றனர்.