புதுச்சேரி: புதுச்சேரி, நோனாங்குப்பம், சுண்ணாம்பாறு படகு குழாமில் பாரடைஸ் பீச் உள்ளது. கொரோனா ஊரடங்கிற்குபின் மழையும் ஓய்ந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அங்கு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனிடையே நிவர், புரெவி புயல் காரணமாக புதுச்சேரியின் சங்கராபரணி, திருக்காஞ்சி உள்ளிட்ட ஆற்றில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளில் பெரும்பாலானவை பாரடைஸ் பீச் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குவியல் குவியலாக ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகமாகி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.