வேலூர்: வேலூர் சதுப்பேரியில் ரூ.13 கோடியில் நடைபெறும் குப்பையில் இருந்து பிரித்த உரம் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த சோதனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சதுப்பேரி குப்பை அகற்ற கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பின்லாந்தில் இருந்து நவீன இயந்திரங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கன்டெய்னர்கள் மூலமாக வேலூர் கொண்டுவந்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி சதுப்பேரியில் நவீன இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் தொடங்கியது.