சென்னை: திருமணம் வைபவங்களுக்கான நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்க உதவியாக, டைட்டனின் நகை விற்பனை பிரிவான தனிஷ்க், ‘ரிவா ஆசீர்வாத்’ என்ற பிரத்யேக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முடிவில் கட்டணம் செலுத்தும்போது செய்கூலியில் சிறப்பான தள்ளுபடியை பெறலாம். ஆசீர்வாத் என்ற இந்த திட்டத்தின் பெயரை போலவே, தங்க வடிவிலான ஆசீர்வாதமாக இது அமைகிறது. வாடிக்கையாளர்களின் வாழ்வில், திருமணத்தில் நகை வாங்குவது மிகப்பெரிய செலவாக உள்ளது. இதற்காக முன்கூட்டியே திட்டமிடுவார்கள். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மாதாந்திர திட்டத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது. சலுகைகள் இதில் உறுதிப்படுத்தப் படுகின்றன.