சென்னை: மீஞ்சூர் அருகே வயல்வெளி பகுதிகளில் மான், பன்றி, நரி உள்ளிட்ட விலங்கினங்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றை சென்னையை சேர்ந்த வேட்டைக்காரர்கள் பல நாட்களாக இரவில் காத்திருந்து வேட்டையாடுவது வழக்கமாக உள்ளது. இதுபற்றிய ரகசிய தகவல் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் அடுத்த கொரஞ்சூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட ஆண் மான் கிடந்தது. மேலும் அதை வேட்டையாடிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களை மீஞ்சூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.