ஐதராபாத்: தெலங்கானாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.2200ல் இருந்து ரூ.850ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிகம் செலவு ஆவதால் பரிசோதனை செய்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். இந்நிலையில், தெலங்கானாவில் கொரோனாவை கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணங்களை அரசு அதிரடியாக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.2200 ஆக இருந்த கட்டணத்தை அரசு ரூ.850ஆக குறைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களும் கொரோனா நோய் தொற்று பரிசோதனையை மிகவும் எளிதாகவும், உடனடியாகவும் செய்து கொள்ள முடியும்.