அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே புலிமேடு மலையடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்தனர். போலீஸ் தடையை மீறி சிறுவர்கள், இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் வந்த நிவர் புயலால் கன மழை காரணமாக ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை சுற்று வட்டார மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு மலைகளில் இருந்து வழிந்தோடும் மழைநீர் ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டி நீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை காண புலிமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.