இதனால், வீட்டு வாசலில் 200 கிலோவுக்கு மேல் கேக்கை வரிசையாக அடுக்கி வைத்தனர். பின்னர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து, அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். கட்சியினருக்கு கேக்குகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் தெரிவித்து மலர் மாலைகள், மலர் கொத்துகள், பரிசு பொருட்களை கொடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் கட்சியினருடன் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், செம்மலை மற்றும் சேலத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
The post சேலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி appeared first on Dinakaran.