வேளாண் சட்டங்கள் வாபஸ் கோரி டிச.10ல் விசிக ஆர்ப்பாட்டம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசு கொண்டுவந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான குளிரிலும் கடந்த 9 நாளாக போராடும் விவசாயிகளைத் தேசத்துக்கு  எதிரான தீவிரவாதிகள் என அவதூறு செய்யும் இழிசெயலில் சங்கப் பரிவாரங்கள் ஈடுபட்டுள்ளன. டெல்லி போராட்டத்தை ஆதரித்து திமுக நடத்திய போராட்டத்தை விசிக சார்பில் வரவேற்று வாழ்த்துகிறோம். அத்துடன், டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகள் வரும் 8ம் தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. அப்போராட்டம்  வெற்றிகரமாக அமைவதற்கு விசிக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த  டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் 10ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் காலை 10 மணிக்கு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: