சிக்கபள்ளாபூர்: குடிபோதையில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிக்கபள்ளாபூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா கமலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கும் மமதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.திருமணம் முடிந்த சிவகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அதேபோல், சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இது விஷயமாக தம்பதிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.