திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரன்ட் அமைப்பின் தலைவர்களான அப்துல் ரஹ்மான், நசருதின், அஸ்ரப் மவுலவி ஆகிய 3 பேர் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கொச்சியில் உள்ள அப்துல் ரஹ்மான் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள அஸ்ரப் மவுலவி வீடு, மலப்புரத்தில் உள்ள நசருதின் வீடு ஆகிய 3 இடங்களில் கொச்சி அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஒரே நேரத்தில் புகுந்தனர். மலப்புரத்தில் நசிருதீன் வீட்டில் 2 லேப்டாப்கள் மற்றும் வங்கி பாஸ்புக்குகள் கைப்பற்றப்பட்டன. திருவனந்தபுரத்தில் அஸ்ரப் மவுலவி வீட்டில் நடத்திய சோதனையின்போது பாப்புலர் பிரன்ட் தொண்டர்கள் திரண்டு அமலாக்கத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.