குடியாத்தம்: நிகர் புயலால் பெய்த கனமழை காரணமாக குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி, கவுன்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கவுன்டன்ய மகாநதியில் இருந்து குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால் பெரிய ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் புத்தர் நகர், பீமன்பட்டி, கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஏரியின் 3 மதகுகளும் சரியான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.