தொடர் மழையால் வீடு இடிந்து தம்பதி பலி

பல்லாரி:  பல்லாரி கவுல்பஜார் பகுதியை சேர்ந்தவர் கொல்லண்ணா(45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சாவித்ரி(40). இத்தம்பதிக்கு மகன்  சந்தோஷ் (13) என்ற மகன் உள்ளார். இவர்கள் மண் சுவரால் கட்டிய வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு  மழை பெய்து வந்தது. இந்த மழையால் கொல்லண்ணாவின் வீட்டின் சுவர் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு  கொல்லண்ணா தன் மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலையில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில்  இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட கொல்லண்ணா, சாவித்ரி இருவரும் உயிரிழந்தனர். அலறல் சத்தம் ேகட்டு அக்கம்பக்கத்தினர் காயத்துடன் இருந்த  சந்தோஷை காப்பாற்றினர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: