நாகை: வேளாங்கண்ணியை அடுத்த தண்ணிலபாடி கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டனர். கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணிலபாடி, வேப்பஞ்சேரி ஆகிய இரண்டு ஊராட்சிகள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணிலபாடி மேலோடு தெருவில் வசிக்கும் இரு சமுதாயத்தினருக்கும் தனித்தனியாக மயானம் உள்ளது. இந்த பகுதில் தான் இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் மயானத்திற்கு செல்லும் பாதை உள்ளது. ஆனால் பாதை இல்லாமல் பல ஆண்டு காலம் இருந்து வந்தது.