சென்னை: சென்னை அசோக் நகர் 15வது அவென்யூவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). நிவர் புயல் காரணமாக மின்தடை மற்றும் மழைநீர் தேங்கியதால், இவர் கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 38 சவரன் நகை, 1.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.