புதுடெல்லி: கார் பார்க்கிங் செய்வது தொடர்பான புகாரை விசாரிக்க சென்றபோது உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட கான்ஸ்டபிள் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகினி பகுதியில் வசிக்கும் முதியோர் தம்பதிக்கும், அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுபற்றி போலீசில் முதியோர் தம்பதி புகார் அளித்தனர். இதனை விசாரிப்பதற்காக கான்ஸ்டபிள் புனித் சர்மா என்பவர் அங்கு சென்று விசாரித்தார். அப்போது, முதியோர் தம்பதி வசிக்கும் அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் தம்பதி கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவ்வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்ட காரை அப்புறப்படுத்த கோரியதை ஏற்காமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்து சர்மாவிடம் தகராறு செய்தனர்.