விஜயபுரா: விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அதை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். விஜயபுரா மாவட்டம், பபலேஷ்வர தாலுகா, ஜெய்னாபுரா கிராமத்தில் பிரசாந்த் தேசாய் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற தேசாய், ஏதோ சத்தம் வருவதை கேட்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அழகான மூன்று சிறுத்தை குட்டிகள் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அலறி அடித்து கிராமத்திற்கு சென்று தெரிவித்தார்.