செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல், படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5.000 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.