போபால்: பசுக்களின் பாதுகாப்புக்காக ‘கோமாதா வரி’யை வசூலிக்க, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. பசுக்களின் பாதுகாப்புக்காக சமீபத்தில் இவர், தனி அமைச்சரவை குழுவை அமைத்தார். இதில், 6 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம், சவுகான் தலைமையில் நேற்று நடந்தது.