புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நக்ரோடாவில் கடந்த வியாழக்கிழமை, வாகனத்தில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த அந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவில் காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் திட்டத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.