ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்படுகிறது. கடந்த 13ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உட்பட 11 பேர் பலியாகினர்.