புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு பிரதமருடன் இணைந்து முதல்கட்டமாக ரூபே கார்டு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இரண்டாவது கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும் பூடான் பிரதமர் லோடே ஷெரிங்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று தொடங்கிவைத்தனர். இதன் மூலம் ரூபே கார்டு வைத்திருக்கும் பூடான் நாட்டை சேர்ந்தவர்கள் இதனை இந்தியாவில் பயன்படுத்தலாம்.