சட்டமன்ற தேர்தல் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் வரவேற்றார்.

 கூட்டத்தில்  காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்புச் செயலர்கள் மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்தல், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திராவுக்கு  சிறப்பான வரவேற்பு அளிப்பது, சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

Related Stories: