மும்பை: பீகாரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ரஷித் சித்திக் என்பவர் எப்எப் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் இறந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பியதாகவும், இந்த வழக்கில் முதல்வர் உத்தவ் மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேயை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார். சுஷாந்த் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தியை கனடா தப்பி செல்ல முதல்வர் உத்தவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உதவியது நடிகர் அக்ஷய் குமார் என தனது யூடியூப் வீடியோவில் ெசய்தி வெளியிட்டார்.